Categories
உலக செய்திகள்

போருக்கு அப்புறம் நாங்கள் நிச்சயம் கொல்லப்படுவோம்…. அச்சம் தெரிவித்த ரஷ்ய வீரர்கள்…..!!!!!!

உக்ரைன் மீதான போர் 16-வது நாளாக போர் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலுக்கு பின் ரஷ்யா திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படுவோம் என்று உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்யவீரர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷிய வீரர்கள் சில பேர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஒரு ரஷ்ய இராணுவ வீரர் போருக்கு பின் சக வீரர்களால் கண்டிப்பாக நாங்கள் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாளில் இருந்து தாங்கள் இறந்ததாகவே கருதப்படுவதாகவும், அண்மையில் பெற்றோரை தொடர்பு கொண்ட போது எங்களுடைய இறுதிச்சடங்குகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக அவர்கள் கூறினர். இதற்கிடையில் போருக்கு பின் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுவது உறுதி என்று அந்த வீரர் தெரிவித்தார்.
இதற்கிடையே ரஷ்ய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரைனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷிய அதிகாரி ஒருவர் சக வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. ரஷிய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் இதுவரையிலும் 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷிய தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |