அமெரிக்காவை சேர்ந்த மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தை வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மிகவும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சில நாடுகளின் பொருளாதாரம் மிகவும் சரிவடைந்தது.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிளிங்க் என்ற மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கடந்த எட்டு மாதங்களில் 3000 மடங்கு அதிகரித்திருந்தது பங்குச்சந்தை வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை லாபம் இன்றி திவாலாகும் நிலையில் இருந்த இந்நிறுவனத்தின் பங்குகள் இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பது, மின்சார வாகன தொழில்களின் வளர்ச்சியை காட்டுவதாக கூறப்படுகிறது.