Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தலைகுப்புற விழுந்த மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மதுபோதையில் பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முழங்குழி தூணுமூட்டுகுளம் பகுதியில் மெக்கானிக்கான சுனில்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜி(24) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது போதையில் சுனில் அப்பகுதியில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி அருகில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தில் சுனில் தலை குப்புற விழுந்ததால் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுனிலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |