கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து போதையில் இருந்த பாலமுருகன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக பாலமுருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாலமுருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.