நடிகை சித்ரா குறித்து அவரின் தோழி ரேகா நாயர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஹேமந்த் சித்ராவின் மரணத்துக்கு காரணமானவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் சித்ரா மரணத்தில் அரசியல் தலைவர்கள் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களால் தனக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் ஊடகத்திற்கு பேட்டி அளித்து பல தகவல்களை கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, சித்ராவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் குடிபோதையில் சித்ரா நடக்க முடியாமல் இருந்த பொழுது நான் என்னுடைய காரில் சித்ராவை அவரின் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சித்ராவிற்கு நிறைய பாய் ஃபிரண்ட்ஸ் இருந்ததாகவும் அவர் பலருடன் டேட்டிங் சென்றதாகவும் கூறியுள்ளார். சித்ராவுக்கு குடி, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் இருந்ததாகவும் அவர் அவ்வளவு நல்ல பெண் இல்லை எனவும் கூறியிருக்கின்றார். அவருடைய வாழ்க்கையே மர்மம் நிறைந்ததாக இருந்த நிலையில் தற்போது அவரின் மரணமும் மர்மமாக இருக்கின்றது என கூறியிருக்கின்றார்.