கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கன்சாஸ் காவல்துறை அதிகாரி ஒருவர், டோனி சாண்டர்ஸ் (47 வயது) என்ற கருப்பின நபரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து டோனி சாண்டர்ஸின் குடும்பத்தினர், மற்றும் கறுப்பின மக்கள் தங்கள் இனத்துக்கு நீதி வேண்டும் என்று போராட்டம் நடத்தினர் . அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறையிடம் தற்காப்புக்காகத்தான் நான்அவரை சுட்டேன் என்று அந்த காவல் அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார். இதனையடுத்து போதுமான ஆதாரங்கள் இல்லாததால் கருப்பினத்தவரை சுட்டுக் கொன்ற காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் குடும்பத்தினர் கோபத்தில் கொந்தளித்து உள்ளனர்.