Categories
இந்திய சினிமா சினிமா

போட்டு கொடுத்த நடிகை ….! சிக்கிய அஜித் பட நடிகர்… அதிர்ச்சியில் பாலிவுட்….!

போதைப்பொருள் வழக்கில் கைதான ராகினி கொடுத்த தகவலின் பேரில் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் விசாரணை நடத்தினர்.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு போதை பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் இடையே சூடு பிடிக்கத் தொடங்கிய  நிலையில்  கர்நாடக திரை நட்சத்திரங்கள் இடையில் போதைப்பொருள் பழக்கம் உள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே விசாரணை தொடங்கப்பட்டது.  மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையில் இந்த விசாரணையானது நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்கில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் நடிகை ராகினி திவேதி மற்றும் அவர்களது நண்பர்கள் 14 பேர் என போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் நடிகை ராகினி திவேதி கொடுத்த புகாரின் பேரில் மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |