Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…. வழங்கப்பட்ட பரிசுதொகை…. மாணவர்களுக்கு பாராட்டு….!!

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி நடைபெற்ற பேச்சுபோட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு பிறந்தாநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழ நாமக்கல் ஆட்சியர் ஆலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக 5,000 ரூபாயும், 2வது பரிசாக 3,000 ரூபாயும், 3-வது பரிசாக 2,000 ரூபாயும் சிறப்பு பரிசாக 2,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெற்றி பெற்ற 16 மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கியுள்ளார். அப்போது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் ஜோதி, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |