கிராமப்புறங்களில் பணிபுரியக்கூடிய அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் ( MD.,MS., ) 50 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் 30 சதவீதம் மதிப்பெண் என இரண்டுமே வழங்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பொது பிரிவிலும் இவர்கள் பங்கேற்பதற்கு தடை இல்லை என்று தெரிவித்துள்ளது.