போடியில் தேசியக்கொடி ஏற்றுவதில் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நேற்று சுதந்திர தின விழாவையொட்டி தேனி மாவட்டத்திலுள்ள போடியில் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் முபராக் மந்திரி தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியினர் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய சாலையில் ஊர்வலமாக வந்து பின் தேவர் சிலை, இந்திரா காந்தி சிலை, வள்ளுவர் சிலை அருகே இருக்கும் கொடி கம்பங்களில் தேசிய கொடி ஏற்றினார்கள்.
இதன் பின்னர் பெருமாள் கோவில் எதிரே இருக்கும் கொடி கம்பத்தில் கொடியேற்ற வந்த பொழுது காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் கொடியேற்ற வந்தார்கள். இதனிடையே கொடியேற்றுவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறியது. இதனால் இரு கோஷ்டிக்கும் இடையே தள்ளும் முள்ளு ஏற்பட்டதில் ஒருவரின் சட்டை கிழிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.