Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…? வெளியான முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை, அரசால் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், கடந்த 2019 ஆம் வருடத்தில் முடிந்தது. ஆனால் அதற்கு முன்பாக 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தியிருந்தால் 2,000 முதல் ரூ.5,000 வரை ஊதிய உயர்வு கிடைத்திருக்கும். கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒப்பந்த பேச்சு நடக்கவில்லை.

இதனையடுத்து சட்டசபை தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., ஆட்சி அமைத்த நிலையில் 6 மாதங்களாகியும் ஊதிய ஒப்பந்த பேச்சு தொடங்கவில்லை. எனவே கூட்டணி கட்சி தொழிற்சங்கத்தினரே போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு டிசம்பர் 29ம் தேதி தொடங்கும் என போக்குவரத்துக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |