Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை: பிளாஸ்டிக் எரித்தால் ரூ.1000 அபராதம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

போகிப் பண்டிகை என்றாலே ஒவ்வொரு வருடமும் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை பறைசாற்றும் விதமாக வீட்டில் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி, அதனைக் கொண்டாடுவதே ஆகும். சில கிராமங்களில் ஒன்றாக எல்லோரும் ஒரே இடத்தில் அனைத்துப் பொருள்களையும் தீயிட்டுக் கொளுத்தி அதனை சுற்றி ஆடியும், பாடியும், மேளமடித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். நல்ல முறையில் அறுவடை முடிந்திருக்கும் நேரம் என்பதாலும், தைத் திருநாளுக்கு முந்தைய நாள் என்பதாலும், உற்சாகத்துக்கு எந்த வகையிலும் குறைவு இருக்காது.
ஆனால் தற்போது இருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையில், போகிப் பண்டிகையன்று பழைய பொருள்களைக் எரிக்க வேண்டாம் என்று பல்வேறு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் போகிப்பண்டிகையை முன்னிட்டு விதிகளை மீறி பிளாஸ்டிக், நெகிழி, டயர்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி இருக்கிறது.

Categories

Tech |