Categories
மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு….. இதுவரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவோ அல்லது தாங்கலாகவோ விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மாவட்டத்திற்கு குறைந்த பட்சம் இரண்டு இடங்கள் என்ற அடிப்படையில் 110 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது வரை பொறியியல் படிப்பில் சேருவதற்கு 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை 1,50,858 பேர் செலுத்தியுள்ளனர். 1,35,281 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர். இன்னும் 4 நாட்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் உள்ளது.

மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |