பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென் கொரிய ரசிகர்களும் பாடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தென்கொரியாவிலும் ரிலீஸானது. இங்கு ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுவதற்கு முன்பாக ஏ ஆர் ரகுமான் இசையில் இடம் பெற்ற பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலை ஒலிக்கவிட்டு அதை தென்கொரிய ரசிகர்களும் சேர்ந்து பாடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொன்னியின் செல்வன் நாவல் உலகில் இருக்கும் அனைவரையும் தமிழர் என்ற புள்ளியில் இணைத்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருமையை உலகறிய செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.