கடைக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.
அமெரிக்க நாட்டில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள மளிகை கடைக்குள் மர்ம நபர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அவர் திடிரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திள்ளார். இந்த தாக்குதலில் அங்கிருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனை அடுத்து போலீசார் காயமடைந்த மற்றொருவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்தும், தப்பி சென்ற மர்ம நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.