Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை” உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உற்சாகத்தில் ஓபிஎஸ்…..!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள்.

அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அந்த தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு நீதிபதிகள் நீங்கள் பொறுப்பில் இருக்கும் போது எதற்காக அவசர அவசரமாக தேர்தலை நடத்த முயற்சி செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் பொதுக்குழு தேர்தலை  நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |