தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் சிரமமின்றி பயணிக்க சிறப்பு பேருந்துகளை அரசு இறங்கியுள்ளது. அதன்படி அரசு போக்குவரத்தில் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. முன்பதிவு செய்ய விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் முகப்பு பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். Search and book tickets என்பதில் from என்ற கட்டத்தில் நீங்கள் எங்கிருந்து பயணம் செய்கிறீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும். பிறகு To என்ற கட்டத்தில் நீங்கள் செல்ல விரும்பும் முறை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பிறகு Journey Date, Time, Adult, Children, Service Class என்பதில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து search கொடுக்க வேண்டும். இப்போது உங்களுக்கான அரசு போக்குவரத்து காண்பிக்கப்படும். இதில் தங்களுக்கு எது வேண்டும் என்பதை தேர்வு செய்து பணம் செலுத்தினால் உங்கள் டிக்கெட் பதிவாகிவிடும். பெங்களூரு, திருப்பதி மற்றும் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களை 044 49076316 என்ற எண்ணில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.