Categories
மாநில செய்திகள்

பொங்கல் சிறப்பு பேருந்துகள்… தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஜனவரி 12-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சிறப்பு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. கடந்த ஆண்டு 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே பேருந்து இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஜனவரி 12-ஆம் தேதி 17-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை அறிவிக்க உள்ளார்.

Categories

Tech |