பேருந்து மீது மோட்டார் சேர்க்கும் போது விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வினுக்கானந்தன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பாலூர் சந்திப்பு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மோசஸ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பேருந்து மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோசஸ்(25) மற்றும் அவருடன் வந்த ஜஸ்டின்(19) ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.