ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்து, சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்திலும் மக்கள் பயணிக்கும் வசதி குறித்து இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டமானது முதல்வர் தலைமையில் காலை சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் மோட்டார் இல்லாத போக்குவரத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் ஒரே பயணச்சீட்டில் மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.