பெங்களூருவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹியூர் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கே.ஆர்.ஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக நடந்த முதல்கட்ட விசாரணையில் தனியார் பேருந்தின் இயந்திர கோளாறு காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.