அரசு பேருந்து மோதி பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் முத்து சீராளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சின்ன நகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆரிசியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனது சித்தப்பாவை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பரமக்குடிக்கு சென்றுள்ளனர். அப்போது வைகை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 2 பெரும் கீழே விழுந்த நிலையில் அரசு பேருந்தின் முன்னாள் சக்கரத்தில் முத்து சீராளன் சிக்கி பலத்தகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காயமடைந்த அவரது சித்தப்பாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற எமனேஸ்வரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அரசு பேருந்து ஓட்டுனரான சென்னையை சேர்ந்த கணேஷன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.