Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்தில் வந்த பயணி…. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் வந்த பயணி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் அருகே சென்ற போது பேருந்தின் டயர் பஞ்சரானதால் ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருக்கும் தனியார் ஹோட்டலுக்கு முன்பு நிறுத்தியுள்ளார். இதனையடுத்து கேரளாவை சேர்ந்த ராபின்மேனன்(32) என்பவர் பேருந்திலிருந்து கீழே இறங்கி நின்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |