Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்மநபர்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார்.

இதனைதொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர் ராமாயி அமர்ந்திருந்த பின்பக்க சீட்டில் அமர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அணிந்திருந்த 4½ தங்க தாலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும் தாலி காணாமல்போனதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக எமனேசுவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |