பெண் மந்திரவாதி ஒருவர் பேய் ஓட்டுவதாக சொல்லி இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா பட்டணந்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மலையாலப்புழா பகுதியில் வசித்து வருபவர் மந்திரவாதி ஷோபனா. இவர் குறை நிவர்த்தி வேண்டி வரும் பெண்களை தாக்கும் காட்சிகள் ஏற்கனவே வெளியான நிலையில், இவருக்கு சொந்தமான மடம் ஒன்று மூடப்பட்டது.
இந்த நிலையில் அவர் பேய் ஓட்டுவது எனும் பெயரில் சோபனா என்ற இளம்பெண் ஒருவரை குச்சியால் அடித்து, மிதிக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.