பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மலையோர பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் காரணமாக அணைகளுக்கு நீர் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எட்டு மணி அளவில் 48 அடி கொள்ளளவை கொண்ட பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேச்சுப்பாறை அணையின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டி இருப்பதால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. வரும் நாட்களில் தொடர்ந்து கனமழை பெய்தால் அணையின் நீர்மட்டம் 44 அடியை கடந்து சென்றால் அணையில் இருந்து உபரி நீர் திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பொதுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.