கல்லூரியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழவேளூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிரஞ்சன்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் தங்கி கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிரஞ்சன் ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 2 நாட்களாக காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளம்பெண் நிரஞ்சனுடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நிரஞ்சன் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.