துப்பாக்கி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் மாவட்டம் கஞ்சன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் தோட்டத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது காட்டு வழியாக வீடு திரும்பிய போது அதே கிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் அவர்கள் 3 பேரையும் வழிமறித்து உள்ளனர்.
மேலும் அந்த கும்பல் கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். உடனே அந்த பெண்ணின் கணவர் தாக்குதலை தடுக்க முயற்சித்த போது, அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் அவரை சுட்டனர். இதில் படுகாயமடைந்த அந்த நபர் கிராமத்துக்கு சென்று உதவியை நாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பெற்ற குழந்தையின் கண் முன்னே அந்த கும்பலானது துப்பாக்கி முனையில், கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
எனவே இச்சம்பவம் குறித்து பாலியல் வன்கொடுமைக்குள்ளான அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தப்பி ஓடிய அதே கிராமத்தை சேர்ந்த லாலு, தன்சிங், விபின், மொகித், சச்சின், லேகேந்திர சிங் உ ள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.