இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள பெரியபட்டி பழனியப்பா காலனியில் செல்வராஜ்(52) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி(27) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு ஜெகநாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியதர்ஷினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.