நாடு முழுவதும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு போடப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் போலியோவை போல கொரோனாவையும் விரட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என்றும், குழந்தைகள் அனைவரும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்கும் அறிவுறுத்தியுள்ளார்.