மனைவியை பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் கூலி தொழிலாளியான அரவிந்த்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அதன்பின் வெளியூருக்கு அழைத்துச் சென்று அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இருவரும் ஊருக்கு வந்த பிறகு அரவிந்த்குமாரை பிடிக்கவில்லை என கூறிவிட்டு அந்தப் பெண் அவரது பெற்றோருடன் சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த்குமார் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்த்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.