Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!…. மீண்டும் தமிழக மீனவர்கள் கைது…. எல்லை மீறும் இலங்கை கடற்படை….!!!!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 தமிழக மீனவர்களை கைது செய்து 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை குறிவைத்து அட்டூழியம் செய்து வருகிறது.

Categories

Tech |