ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி ஹேமந்த் பிஸ்வால் நேற்று காலமானார். அவருடைய வயது 82. இவர் ஒடிசாவில் இரண்டு முறை முதல் மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். இந்த நிலையில் இவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று காலமானார் . இதனையடுத்துஅவருடைய மறைவிற்கு ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.