Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. தறிகெட்டு ஓடிய பேருந்து…. 20 பேர் பலி….!!

தேயிலை தோட்டத்திற்குள் பாய்ந்த பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் உகாண்டாவின் மேற்கு பகுதியில் போர்டல் என்ற நகர் அமைந்துள்ளது.  இந்த பகுதியில் இருந்து அந்நாட்டின் தலைநகரான கம்பாலாவுக்கு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில்  30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் போர்டல் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையில் தறிக்கெட்டு ஓடியது.

மேலும் பஸ்சில் இருந்த அனைவரும் பயத்தில் கத்தி கதறி அலறி துடித்தனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலையோரம் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் பாய்ந்த பஸ் பல முறை உருண்டு விபத்துக்குள்ளானது. இதனால் பஸ் உருக்குலைந்து போனது.
இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த பலரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |