2 பேருந்துகள் சாலையில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் இன்று காலை வந்த 2 பேருந்துகள் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 13 வயது சிறுமி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.