ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் கேதர் லால் குப்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் கேதர் லால் குப்தா பலரிடமிருந்து கடனை பெற்றுள்ளார். ஆனால் அதனை திரும்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கேதர் லால் குப்தா மற்றும் அவரது குடும்பத்தினர் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் அதே பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு அருகே மயங்கி கிடந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 பேரின் சடலத்தையும் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.