பிரபல பிரான்ஸ் நிறுவனம் 7500 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது
கொரோனா தொற்றால் அதிக அளவில் தாக்கத்தை எதிர்கொண்ட ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தங்கள் ஊழியர்கள் 7500 பெயரை பணியிலிருந்து நீக்கி வீட்டிற்கு அனுப்ப முடிவு எடுத்துள்ளது. நிறுவனத்தில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்ததோடு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்வதற்கு முடிவெடுத்துள்ளது.
ஏர் பிரான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 6500 பெயரையும் HOP பிரிவில் பணிபுரிந்து வரும் 1000 பேரையும் பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து ஏர் பிரான்ஸ் நிறுவனம் அடுத்த வெள்ளிக்கிழமை தொழிலாளர் யூனியன்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இருக்கின்றது. பணிநீக்கம் செய்யப்பட இருக்கும் 7500 பேரில் 3500 பேர் ஓய்வு பெற்று செல்பவர்கள் என்பது குறிப்பிடதக்கது.