Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் மட்டுமே சமூகப் போராளியா…? சண்டை செஞ்சா தான் ஒழியும்…. சீமான் பேச்சு….!!!

சமூக நீதிப் போராளி ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நினைவேந்தல் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார், சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் இரட்டைமலை சீனிவாசன் போன்ற பலர் போராடி இருக்கிறார்கள். ஆனால் பெரியார் மட்டுமே சமூக நீதிக்காகப் போராடினார் என்பதை என்னால் ஏற்க முடியாது. தமிழக போராளிகளில் பெரியாரும் ஒருவர் என்று கூறினால் ஏற்றுக்கொள்வேன்.

இப்படி பெரியாரை மட்டுமே சமூக நீதிக்காக அடையாளப்படுத்தி தமிழர்களின் அடையாளத்தை அழித்தால், எந்த வகையிலும் அதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். மேலும் நீர் தேர்வு மரணம் குறித்து பேசிய அவர்,ஆட்சிக்கு வந்தவுடனே நீட்டை ஒழிப்போம் என்று பேசியா திமுகவினர் ஆட்சிக்கு வந்ததும் தீர்மானம் போட்டால் என்ன பயன்? 8 கோடி பேர் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசு அவர்களுக்காக மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க கூடாதா? சண்டை செய் தால்தான் இது ஒழியும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |