பெங்களூரை சேர்ந்த முதியவர் ஒருவர் ( வயது 60 ) மனைவி இறந்த பிறகு தனது மகளுடன் ( வயது 22 ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருடைய மகள் தந்தையின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இருப்பினும் அந்த முதியவர் தனது மகளின் உடல் பாகங்களை தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அந்த இளம்பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குளித்துவிட்டு பின்னர் உடை மாற்றி கொண்டிருந்த போது முதியவர் கதவின் வழியாக எட்டி பார்த்துள்ளார்.
அதன் பிறகு மெல்லமாக கதவை திறந்து அந்த அறைக்குள் சென்றிருக்கிறார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனே அந்த முதியவரை பிடித்து தள்ளி விட்டு செல்போனில் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். அதன்பேரில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்த உறவினரையும், அவருடைய மகளையும் முதியவர் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் அவர்கள் இரண்டு பேரும் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது மகள் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி முதியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் முதியவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.