பெண் ஒருவர் மாயமாகி 100 நாட்கள் கடந்த நிலையில் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயதுள்ள பெண் ஸ்கார்லெட். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி முதல் மாயமாகியுள்ளார். ஸ்விஸ் எல்லையில் இருக்கும் வனபகுதியில் தான் அவர் மாயமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்கார்லெட் இறுதியாக பல்பொருள் அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது ஆனால் அதன் பின்பு அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்ற தகவல் கிடைக்கவில்லை. மேலும் ஸ்கார்லெட் மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். எனவே அதற்காக மேற்கொண்ட பயணத்தில் தான் மாயமாகியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தற்போது இவரின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள் இணைந்து ஒரு முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இதனால் தற்போது உலகில் உள்ள பல இடங்களில் இருந்தும் பலர் உதவ முன்வந்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினரும் ஹெலிகாப்டர், மோப்ப நாய்கள் மற்றும் ஆளில்லா விமானம் போன்ற பல்வேறு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் எதிலும் அவர் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. ஏமாற்றம்தான் மிஞ்சியது என்று தற்போது தேடுவதையே நிறுத்தியுள்ளனர்.