வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான சுரேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தம்மகவுண்டனூர் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் சரியான பெண் கிடைக்கவில்லை.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சுரேஷை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.