உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களா? அப்ப இந்த திட்டத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய தபால் துறையின் நமக்கு பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. பிறந்த குழந்தைகள், பெண் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. நீங்கள் பெண் குழந்தைகளுக்காக கொஞ்சம் சேமிக்க எண்ணினால் இந்த திட்டம் உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். அது செல்வமகள் திட்டம்.
பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 ரூபாய் இருந்தால் போதுமானது. உங்களால் 15 வருடங்கள் மட்டுமே இந்த தொகையை செலுத்த இயலும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு வட்டி விகிதம் கிடையாது. மாதந்தோறும் ரூபாய் 250 முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம்.
மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 21 வயது ஆகும் போது உங்களது மகளுக்கு 5.9 லட்சம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் செலுத்திய தொகை 15 வருடங்களுக்கு 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால் வட்டித் தொகை 3.29 லட்சம். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சேமித்தால் இறுதியில் 51 லட்சம் கிடைக்கும். செலுத்தும் தொகைக்கு ஏற்பது போல் உங்கள் மகளின் கைகளில் லட்சங்கள் கிடைக்கும். அவர்களின் எதிர்காலத்திற்கு இது நல்லதாக அமையும்.