காதல் பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் கிராமத்தில் தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கேஸ்வரனுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் தங்கேஸ்வரன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கேஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த தங்கேஸ்வரனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தங்கேஸ்வரனின் தாயார் ஈஸ்வரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.