Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்களே உஷார்!…. அவங்ககிட்ட சிக்கிடாதீங்க!…. நடிகை பூர்ணா எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கும் பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் திருமண மோசடி கும்பலிடம் சிக்கி பூர்ணா மீண்டு வந்தது பரபரப்பானது ஆகும். இவருக்கும் ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் திருமணம் முடிந்திருக்கிறது.

இந்நிலையில் பூர்ணா பேட்டி அளித்ததாவது “என் திருமணம் தள்ளிப்போனதால் வேறு சாதியிலோ, மதத்திலோ வரன் தேடுகிறீர்களா என பலர் கேட்டனர். இது என் தாய்க்கு சங்கடத்தை உண்டாக்கியது. இதனால் என் வீட்டார் மாப்பிள்ளை தேட ஆரம்பித்து 3-4வருடங்கள் ஆகியும் சில காரணங்களால் எனக்கு திருமணம் முடிவாகாமல் தாமதமாகிக் கொண்டே இருந்தது. அதில் சில வரன்களின் குடும்பத்தினர் நான் நடிகையாக இருந்த காரணத்தினால் பயந்து நிராகரித்தனர்.

சென்ற ஜூன் மாதம் எனக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். இதற்கிடையில் ஒரு கும்பல் என்னை திருமணம் செய்வதாக மோசடி செய்ததை வெளிப்படுத்தி போலீசில் பிடித்து கொடுத்தேன். ஆகவே மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்தேன். எனினும் பல பெண்கள் இதுபோன்று மோசடி கும்பலிடம் ஏமாந்த கதையை என்னிடம் கூறியது அதிர்ச்சியாக இருந்தது” என்று பேசினார்.

Categories

Tech |