Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பொள்ளாச்சி வேண்டுமா ?”… கனிமொழி பரபரப்பு பிரசாரம்..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து கனிமொழி எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. காரைக்குடி அருகே காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா தலைவர்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசி வருகின்றனர். ஆனால் பெண்கள் மீதான பாலியல் பாதிப்பு மற்றும் வன்முறைகள் அவர்கள் ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு ஆண்டில் 60 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான நல்லாட்சி வேண்டுமா ? அல்லது பொள்ளாட்சி வேண்டுமா ? என்பதை நீங்களே சிந்தித்து வாக்களியுங்கள்.

தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாணவ-மாணவிகளின் மருத்துவக் கல்விக்கு எதிரான நீட் தேர்வு சட்டம், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், குடியுரிமை தடைச் சட்டம் ஆகியவற்றை அதிமுக ஆட்சியாளர்கள் ஆதரிக்கின்றனர். மேலும் 23 லட்சம் பேர் தமிழகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் காத்திருக்கின்றனர். ஆனால் 3 லட்சம் காலிப்பணியிடங்கள் தமிழக அரசில் நிரப்பப்படாமல் உள்ளது. எனவே நல்லாட்சி மலர தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் கூறினார்.

Categories

Tech |