விடுதியில் தங்கி இருக்கும் பெண்களின் குளியல் வீடியோவை மாணவி ஒருவர் மருத்துவருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதியில் மருத்துவர் ஆஷிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கும் பி.எட் படிக்கும் காளீஸ்வரி என்ற மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவி மதுரையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி படித்துள்ளார்.
அப்போது அங்குள்ள மாணவிகள் குளிக்கும் வீடியோ மற்றும் உடைமாற்றும் வீடியோவை யாருக்கும் தெரியாமல் எடுத்து மருத்துவருக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து விடுதி மேலாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மாணவி காளீஸ்வரி மற்றும் மருத்துவர் ஆஷிக்கை கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.