Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள்…. வனக்காப்பாளர்க்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வனக்காப்பாளரை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை என்ற  அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு தினம் தோறும் ஏராளமானோர் குளிக்க வருவது வழக்கம். அதேபோல் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த சரவணகுமார், கந்தசாமி, பாலமுருகன் என்ற 3 பேர் அருவிக்கு குளிக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் அங்கு குளித்துக்கொண்டிருந்த பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துள்ளனர். இதனால் அந்த பெண்கள் வனக்காப்பாளர் பீம்ராஜ் என்பவரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பீம்ராஜ் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பீம்ராஜீவை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவரை   காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வனக்காப்பாளரை  தாக்கிய பாலமுருகன், சரவணகுமார், கந்தசாமி, ஆகிய 3 பேரும் முன்னாள் ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |