Categories
மாநில செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை…. அமைச்சர் மூர்த்தி உறுதி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் உயர்மட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

Categories

Tech |