தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தே.மு.தி.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாணவர் அணி துணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மேலும் மாநகர மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் அமுதன், ஐடன் சோனி உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்