பயணிகளின் விவரங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு அமைப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இரட்டை கோபுரத்தின் மீது கடந்த 2001-ம் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட், பிறந்த தேதி மற்றும் பணம் செலுத்தும் விதம் உள்ளிட்ட விவரங்கள் சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் மூலம் பயணிகளின் மீதான சந்தேகத்தை நீக்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறையை தற்போது ஸ்விட்சர்லாந்து அரசும் பின்பற்ற விரும்புகிறது.
இதன் காரணமாக பெடரல் கவுன்சில் பயணிகளின் முழு விவரங்களைக் கொண்டு ஒரு தேசிய பதிவேட்டை உருவாக்குவதற்கும், இந்த பதிவுகளை ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு ஒன்றினை நியமிப்பதற்கும் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தீவிரவாத தாக்குதலை தடுப்பதோடு, சந்தேகப்படும்படியான நபர்களை அடையாளம் கண்டு பிடிக்கவும் முடியும். இந்த திட்டம் நாடாளுமன்றத்தில் வரவேற்கப்பட்ட போதிலும், சில அரசியல் தலைவர்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது போன்று இருக்கிறது என குற்றமும் சாட்டியுள்ளனர்.